Wednesday, November 25, 2009

குறுந்தொகை

கன்று முண்ணாது கலத்தினும் படா அது
நல்லான் தீம்பால் நிலத்துஉக் காங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே

- வெள்ளிவீதியார்.

அறிய சொற்கள் :

திதலை - தேமல் : அல்குல் - இடையும் மேல் தொடைப்பகுதியும்
மாமை - பேரழகு : கவினே - வீணே

பொருள் :

கண்ணும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் பசுவின் பால் நிலத்தில் வீணாவது போல், என் பேரழகு எனக்கும் ஆகாமல் என் ஐயனுக்கும் ஆகாமல் என் உடலை பசலை உண்கிறது. தேமலால் என் அல்குல் பேரழகு வீணாகிறது.

No comments: